
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் கட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கடந்த சில தனங்களாக மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
அதேவேளை சில வர்த்தக நிலையங்கள் மற்றும் சில நபர்களால் எரிபொருட்கள் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்துவருகின்றமை தொடர்பில் செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றதோடு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 137 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை சந்தேகநபர்களிடம் இருந்து 27 ஆயிரம் லீற்றர் பெற்றோலும் 22 ஆயிரம் லீற்றர் டீசலும் மற்றும் 10 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய்யும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.