ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டியுள்ளது: போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் -ரணில்

நாட்டில் ரூபாய் வருமானம் இன்மையால் ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களிடம் ரூபாய் வருமானம் இல்லை, இப்போது இன்னும் ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டும் என்றும் வருடாந்த பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதத்தை தாண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது ஏற்கனவே அதிக விலைகள் காரணமாக இன்னல்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *