20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும்! சனத் ஜயசூரிய

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்,

20ஆவது திருத்தத்தை நீக்குவது அரசாங்கத்தின் நேர்மைத் தன்மையை அறிந்துகொள்ள பயன்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும், புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு வாரங்கள் கடந்த போதிலும் உறுதியான எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிப்பதாகவும் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

“எங்கள் மக்கள் இன்னும் வரிசையில் நிற்கிறார்கள். அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து மக்களின் துன்பங்களை மறந்துவிடாதீர்கள், ”என்று ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *