
பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், அதிகாரத்திற்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்கமாட்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“நான் பொறுப்பேற்க முடியாது என்று கூறவில்லை. இன்னும் பிரதமராக பதவியேற்க நான் தயாராக இருக்கிறேன்.
கசப்பான உண்மையைப் பேசுவோம். மத்திய வங்கிக் கொள்ளையர்களைக்கொண்ட அரசாங்கம் திருடர்களைப் பிடிக்க முடியுமா? மத்திய வங்கிக் கொள்ளையர்கள் இலங்கை வங்கியில் கடன் பெற்றுள்ளனர்.
இந்த தருணத்தில் நான் பிரதமராக பதவியேற்று தூய்மையான ஆட்சியை செயற்படுத்த விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.