நெடுஞ்சாலை பேருந்துகளுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எரிபொருட்களின் விலைகளும் நேற்றுமுன்தினம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருளின் விலை அதிகரிப்பை அடுத்து நெடுஞ்சாலைகளில் இயங்கும் சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று அறிவித்துள்ளது.

சொகுசு நெடுஞ்சாலை பேருந்துகளின் கட்டணம் 19.49% அதிகரித்துள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று பிற்பகல் 01.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக NTC மேலும் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

கொழும்பு – மாத்தறை: ரூ. 1,210

கடவத்தை – காலி : ரூ. 1,000

கொழும்பு – எம்பிலிப்பிட்டிய: ரூ. 1,680

கொழும்பு – வீரகெட்டிய : ரூ. 1,550

கொழும்பு – மொனராகலை : ரூ. 2, 420

மகும்புர – அக்கரைப்பற்று : ரூ. 3,100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *