அமெரிக்காவில் 18 குழந்தைகள் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின்  டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உட்பட ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சாண் அணன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவல் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி ஒன்றில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

18 வயதான இளைஞரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆயுததாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 முதல் 10 வயதுக்கிடைப்பட்ட 2, 3 மற்றும் 4ஆம் தர மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 66 வயதான பெண்ணொருவரும் 10 வயதான சிறுமியொருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *