
தொடர்ந்து மூன்றாவது நாளாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளையும் (26) இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 12 தசம் 5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2 தசம் 3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நாளைய தினம் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு தினங்களிலும் லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.