
கொழும்பு,மே 25
எரிவாயு விநியோகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) வரை இடம்பெற மாட்டாது என லிட்ரோ தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை முதல் எரிவாயு விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு எரிவாயு கொள்கலன் கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு கப்பல் எதிர்வரும் (27) வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.