ராஜபக்ஷர்களின் குடும்ப ஆட்சியை மக்கள் தற்போது நிராகரித்து வருகின்றனர். தற்போது ஏற்படுத்தப்பட்டிருப்பது சர்வகட்சி அரசாங்கம் என்று யாரேனும் கூறுவார்களாயின் அது பாரிய பொய்யாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அதேபோன்று நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசாங்கம் என்று யாரேனும் கூறுவார்களாயின் அதுவும் பாரிய பொய்யாகும்.
ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே இந்த அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராபக்ஷர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை 09 ஆம் திகதிக்கு முன்பே இந்த அரசாங்கம் அறிந்துகொண்டது.
மக்கள் எழுச்சி, தொடர்ச்சியான பொதுமக்கள் போராட்டம் என்பன முன்னெடுக்கப்படப்போவதாக புலனாய்வு பிரிவினர் முன்கூட்டியே அறிவித்துவிட்டனர்.
இந்த மக்கள் எழுச்சியிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை ராஜபக்ஷர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டனர்.
எனவே பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காக பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க வேண்டும் முன்கூட்டியே தீர்மானித்து விட்டனர். இதில் புதுமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
2015 முதல் 2019 வரை ராஜபக்ஷர்களின் குடும்பத்தை பாதுகாத்தவர் ரணில் விக்கிரமசிங்க என்பது சகலரும் நன்கு அறிவர்.
எனவே இந்த அரசாங்கத்தை எதிர்க்கட்சி பொறுப்பேற்கவில்லை என்று யாரேனும் கூறுவார்களாயின் அது பாரிய பொய்யாகும்.
பொறுப்புமிக்க கட்சி என்ற முறையில் அலுவலக பணியொன்றை ஏற்பதை போன்று பிரதமர் பதவியை ஏற்க முடியாது.
அரசாங்கத்தை பொறுப்பேற்தாயின் ஏதேனும் உடன்பாட்டுடனேயே அதனை நாம் பொறுப்பேற்போம்.
இவ்விடயத்தில் எதிர்க் கட்சித் தலைவர் மிகவும் பொறுப்புடனேயே நடந்துகொண்டார்