
கொழும்பு,மே 25
நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயத்திலக்க உள்ளிட்ட 6 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் புதன்கிழமை 25 முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.