கிளிநொச்சி மாவட்டத்தில் இறுதியாக நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இன்று (25) பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ‘அக்கராயன் ஆற்றிலிருந்து ஆறுகளை பாதுகாப்போம்’ வேலைத்திட்டத்தில் ஆற்றிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாகவும், கடந்த பெரும் போகத்தின் போது சேதனப் பசளை பயன்படுத்தியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு தொடர்பில் அவற்றுக்கான நட்டஈடு கிடைக்காமை, மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்டஈடு கிடைக்காமல் என பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் துறைசார் திணைக்கள அதிகாரிகள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

