
கொழும்பு,மே 25
இந்தியாவிலிருந்து வரும் பொருட்களை காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குவதற்கு நடவடிக்கை யெடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (25) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்றைய கலந்துரையாடலில் இரணைமடு நீர்ப்பாசனம், உரம், அக்கராயன் குளத்தின் ஏற்று நீர்ப்பாசனம், காணி,வீட்டுத்தோட்டம் போன்ற மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்பின்னர் ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் அருகில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை தாண்டி பல தூரம் கொழும்பு செல்கிறது காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் உரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.