
கொழும்பு,மே 25
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் Sarah Hulton ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பொருளாதார மறுசீரமைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக் கொள்வது ஆகிய விடயங்கள் தொடர்பிலான திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton மேலும் தெரிவித்துள்ளார்.