தமிழ்நாடு பிராந்தியத்தில் இருந்து இலங்கை வாழ் மக்களுக்கும் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள், இலங்கையில் வாழும் சகல மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபையின் லக்கம் பிரதேச உறுப்பினர் எம்.பி.ஆணந்தன் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் விலை வான் அளவில் உயர்ந்து உள்ளது.
பெருந்தோட்ட மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் தமிழ் நாடு அரசு வழங்கிய நிவாரணம் கிடைக்கும் என நம்பியுள்ளனர்.
ஆகையால் முடிந்தளவு அப் பொருட்கள் நாட்டில் சகலருக்கும் கிடைக்கும் படி வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார்.