மட்டக்களப்பில் அழிவடையும் நிலையிலுள்ள பாடும்மீன்கள் வாழும் வாவி

மட்டக்களப்பு வாவி பெருகிவரும் ஆற்றுவாழைத் தாவரங்களால் வாவி அழிவடைந்து வருவதுடன் கடற்தொழிலாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குறித்த வாவியில் மீன்கள் பாடலிசைத்ததால் பாடும்மீன்கள் வாழும் வாவி என குறித்த வாவி சர்வதேச புகழ் பெற்றது.

குறித்த மட்டக்களப்பு வாவியில் சுமார் 15 ஆயிரம் கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

குறித்த ஆற்றுவாழைத் பெருக்கத்தால் கடற்தொழிலாளர்கள் தோணிகளைத் தள்ள முடியாமலும் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

குறித்த வாவியினை அழித்துவரும் ஆற்றுவாழைகளை அகற்றித்தருமாறு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *