
யாழ்ப்பாணம்,மே 25
சமகாலத்தில் இலங்கை எதிர்நோக்குகின்ற பொருளாதார சவால்களினை தீர்வு கொள்ளுதல் என்ற தொனிப் பொருளில் தனியார் விடுதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கருத்து பரிமாற்றத்தினை வர்த்தக தொழிற்துறை மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் வணிக அமைப்புகள், அரச நிறுவனங்கள் பல்கலைக்கழக புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களினை முன்வைத்தனர்.
அதில் பேராசிரியர் சிவனேசன் அவர்கள் தனது கருத்தினை முன்வைக்கின்ற போது,
சமகாலத்தில் நாடு எதிர்நோக்கின்ற பொருளாதார பிரச்சினைக்கு நாட்டில் காணப்பட்ட அரசியல் ஸ்திரமின்மையும் இதன் விளைவாக நிலையான பொருளாதார சமூக மேம்பாட்டுககான கொள்கைளினை வடிவமைத்து கொள்ளாமையுமே மூலகாரணம் என்றார்.
மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் அரசியலும் வியாபாரம் ஒன்றாக கலந்து அதாவது இந்து தத்துவங்களில் கூறப்படும் இருமையிலும் ஒருமை எனப்படும் அத்துவிதம் போன்ற நிலை காணப்படுகின்றது அதாவது வியாபாரியே அரசியல் வகிபாகம் அரசியல் வியாபாரியாகவும் உள்ளனர்.
இதனால்தான் மக்கள் வீதியில் பணத்துடன் நின்றும் அன்றாட வாழ்வுக்கு கையேந்துகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பது நீண்ட மற்றும் குறுகிய திட்டங்களின் மூலம் சாத்தியப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வியாபாரத் துறையினை, மீன்பிடி, சுற்றுலா போன்ற துறைகளினை விருத்தி செய்ய வேண்டும். திட்டங்களினை தயாரிக்கின்ற போது அரச தனியார் மக்களினை உள்வாங்கிய ஒரு திட்டமாக அது அமைய வேண்டும் எந்த ஒரு திட்டமும் சமூகத்தின் நிலை போன்ற வாழ்வாதாரத்துக்கு முக்கிய பங்கினை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டதுடன் அதில் காணப்படும் நடைமுறை சிக்கல்களையும் குறிப்பிட்டார்.
மேலும் இவ் மூன்று துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டியதன் அவசியத்தையும் இத்தகைய துறைகளுக்கு இடையே ஓர் இணைப்பினை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
சுற்றுலா துறையினை பொறுத்தவரை வடமாகாணத்தில் ஆரோக்கிய சுற்றுலா மரபுரிமை, அண்மிய, தீவகை சுற்றுலாக்களினை உருவாக்கலாம். என்றும் குறிப்பாக ஆரோக்கிய சுற்றுலாக்கான வாய்ப்பினையும் அதற்கான தேவைப்பாட்டினை குறிப்பிட்டிருந்தார்.
அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகம் புதிய உத்வேகத்துடன் சமூகத்துடன் சேர்ந்து சேவை சுற்றுலாவையும் குறிப்பாக முகாமைத்துவ கற்கைகள் பீடம் தொடர்ந்து சமூகத்துடன் சேவை ஆற்றும் என்றும் குறிப்பிட்டார்.