
புத்தளத்தில் 10 நாட்களுக்குப் பிறகு மண்ணெண்ணை எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
புத்தளம் எரிபொருள் நிலையத்தில் சுமார் 10 நாட்களுக்குப் பிறகு 6500லீற்றர் மண்ணெண்ணை இன்று கொண்டுவரப்பட்டதாக எரிபொருள் நிலைய முகவரொருவர் தெரிவித்தனர்.
மண்ணெண்ணையைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் இன்று காலை முதல் நீண்டவரிசையில் காத்து நிற்பதை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில் கடற்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவிற்கும் வீட்டுப் பாவனைக்கு 500 ரூபாவிற்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.