தம்பலகாமத்தில் விபத்து – 6 பேர் காயம்!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு பின்னால் பாரவூர்தி மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து கொழும்பி நோக்கிச் சென்ற பேருந்தும், களனியை நோக்கிப் பயணித்த பாரவூர்தியும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *