இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

இந்தியா,மே 25

இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் சிவகரன், முத்து ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30,000 அபராதமும், வேலுசாமி, கிரிதரன், கருணாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 20,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 4 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

தமிழகத்தில், சென்னை பெரியமேடு அருகே வெடிகுண்டு செய்ய தேவையானப் பொருட்களை வெளிமாநிலத்தில் இருந்து வரவழைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக இலங்கைத் தமிழர்களான சிவகரன் என்ற சிவா, முத்து என்ற சம்பட்டி, வேலுசாமி என்ற பிரபாகரன், கிரிதரன், கருணாகரன் உள்ளிட்ட 13 பேர் மீது க்யூ பிரிவு பொலிஸார் கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *