தனங்கிளப்பில் இறால் வளர்ப்பு: டக்ளஸ் நடவடிக்கை

யாழ்ப்பாணம், மே 26:

சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இறால் வளர்ப்பை மேற்கொண்டு நீர் வேளாண்மையை மேற்கொள்வதற்கு தொழில் முயற்சியாளர்கள் முன்வந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வேலைத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளி, சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி உஷா, தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் நிருபராஜ், கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *