நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் தொடர்பில் நடவடிக்கை!

கடந்த மே-09 அன்று நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர், இதுவரை தமது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று நீதிமன்றில் அறிவித்தார்.

இதேவேளை, சட்டமா அதிபரின் பணிப்புரையை புறக்கணித்து, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, இடமாற்றம் செய்ய பொலிஸ் திணைக்களம் தவறியுள்ளது.

இந்நிலையில் இதற்கான காரணத்தை விளக்குமாறு  பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் திலின கமகே நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *