திருகோணமலை பாடசாலை வளாகத்தினுள் கைக்குண்டு மீட்பு

திருகோணமலை – குச்சவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று (25) குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தின் மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது புதைக்கப்பட்ட நிலையில், காணப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பிரதேச வாசிகள் குச்சவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கைக்குண்டு மீட்பதற்கான ஏற்பாடுகளை குற்றவாளி பொலிஸாருக்கு மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கைக்குண்டினை செயலிழக்க செய்வதற்காக விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *