இலங்கை தேசிய கபடி அணியின் 12 வீர்ர்களுள் 4 பேரை மட்டக்களப்பு மாவட்டம் வழங்கியுள்ளதுடன், இலங்கை தேசிய கபடி நிருவாகத்திலும் செயலாளரை கொண்டுள்ளது.
கபடியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கபடி பயிற்றுவிப்பாளர் மதன் துரைசிங்கத்தின் தலைமையில்
பாடலொன்றை மட்டக்களப்பில் வெளியீடு செய்துவைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன் விசேட அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் பாடல் இறுவெட்டினையும் வெளியிட்டு வைத்திருந்தார்கள்.
இலங்கை கபடி அணி கடந்த மாதம் பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்ற ஆசிய அணிகளுக்கான போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்று வெற்றிக்கிண்ணத்தையும் சுவீகரித்துள்ளதுடன், மட்டக்களப்பு வீரர் ஒருவரே சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

