
அடுத்த ஆறு நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயுவை வழங்கவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாணய கடிதங்களை திறக்க முடிந்ததால், அடுத்த 6 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது என்றும், 7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.