அத்தனகல்ல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் கைது

அத்தனகல்ல, மே 26

தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை அத்தனகல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊராபொல பிரதேசத்தை சேர்ந்த அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கிராம உத்தியோகத்தர் அலுவலகம் ஒன்று கீழ் இயங்கும் வீடு ஒன்றுக்குச் சென்ற சந்தேக நபர், ஒரு பிள்ளையின் தாயை தாக்கியதுடன் அவரின் கைத்தொலைபேசியையும் வீசி எறிந்து உடைத்துள்ளதாக இந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *