டோக்கியோவுக்கான இலங்கை தூதுவர் பதவி விலகல்

டோக்கியோவுக்கான இலங்கை தூதுவர் சஞ்சீவ் குணசேகர பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பல வர்த்தக நிறுவனங்களை கொண்டிருக்கும் குணசேகர, அங்கிருந்தே பதவி விலகல் கடிதத்தை வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நீண்டகால நண்பரான குணசேகர, 2021 ஜனவரியில் ஜப்பானின் இலங்கை தூதுவராக கடமைகளை பொறுப்பேற்க நாடாளுமன்ற உயர் பதவிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டார்.

இலங்கையின் நிதி நெருக்கடிக்கு மத்தியில், ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு மத்தியில் தூதுவரின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *