மூதூர் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 19 நாட்களுக்குப் பின்னர் இன்று வியாழக்கிழமை (26) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.
ஒருவருக்கு 500 ரூபாய்க்கு மாத்திரம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் வெயிலில் காத்திருந்து மண்ணெண்ணெயை பெற்றுக் கொண்டனர்.
இதன்போது பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும்போது வீட்டில் சமைப்பதற்கும் மண்ணெண்ணெய் இல்லை.மின்சாரம் அடிக்கடி போகின்றது படிக்கிற பிள்ளைகள் கஷ்டப்படுகின்றனர்.
வயதான நோயாளிகளான நாங்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் நின்று மண்ணெண்ணெய் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
இதற்கு அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமென மூதூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



