சிகரெட் பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 55 பேர் மரணம்!

மதுசாரம்,மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மே 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது .

குறிப்பாக இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஒரு தொனிப்பொருளை முன்வைத்து அனுஷ்ட்டிக்கப்படுகின்றது .

இதனால் 2022 ஆம் ஆண்டிற்கான புகைத்தல் எதிர்ப்பு தின தொனிப்பொருளாக” சூழலைப் பாதுகாப்போம் ” என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிப்படவுள்ளது.

இதற்கான பல்வேறு செயற்பாடுகள் நாடாளாவிய ரீதியிலும் ,சர்வதேச ரீதியிலும் மேற்கொள்வதற்காகவும் காத்திருக்கிறது.

இது தொடர்பாக இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் ஊடக கலந்துரையாடல் நடைப்பெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் மதுசாரம்,மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி அதிகாரி ரகீம் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ;

சிகரட் பாவனையால் நாளாந்தம் இலங்கையில் மாத்திரம் 55 பேர் மரணிக்கின்றனர் . ஒரு வருடத்தில் 20 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர்.

இருந்த போதிலும் இது சட்ட ரீதியான பொருளாக காணப்படுகிறது.இந்த பாவனையால் பலவிதமான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

நாட்டில் அரிசி,கோதுமை மா, சீனி போன்ற பொருட்களின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. ஆனால் சிகரட்டின் விலை கடந்த 5 வருடங்களாக மிகவும் குறைந்தளவிலேயே கூடுகிறது .

விலை கூடினால் பாவனை குறையும் அதே அளவிற்கு அரசாங்கத்த்திற்கும் இலாபம் கிடைக்கும் எனினும் இதனை அரசாங்கம் விலை உயர்த்தாமல் இருக்கிறார்கள்.

அரசாங்கத்திற்கு 57 பில்லியன் இலாபம் கிடைக்கியில் 123 பில்லியன் சிகரட் பாவனையால் பாதிக்கப்படுபவர்களுக்காக செலவழிக்கின்றது .இந்த நிலையிலும் சிகரட்டுக்கான விலையினை உயர்த்தாமல் உள்ளது ஏன் ? என்ற கேள்வி காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *