‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களிடம் CID மீண்டும் வாக்குமூலம்!

‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் இன்று (வியாழக்கிழமை)  வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

மே 9 தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக போராட்டக்காரர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக,போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் போராட்டத்தளத்தில் உள்ள பல நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தமது சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் வழங்கியதாகவும்இ அன்றைய தினம் பிரசன்னமாகிய நபர்களை தெளிவாகக் குறிப்பிட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னதாக தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *