
கொழும்பு,மே 26
நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
இவ்வாறான நிலையில் அதிகரித்த வாழ்க்கை செலவு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வழிகளிளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு ஏற்றவாறு, தனியார் துறையினரது சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.