போதைப்பொருள்- பண மோசடி குற்றச்சாட்டு: ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது!

போதைப்பொருள் மற்றும் கடன் வழங்குதல்- மோசடி செய்த குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆறு ஐரிஷ் பாதுகாப்பு துருப்புக்கள் மற்றும் ஒரு கோல்ட்ஸ்ட்ரீம் பாதுகாப்பு படைவீரர் ஆகியோர் திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரோயல் மிலிட்டரி பொலிஸ்துறையால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலிக்கான ட்ரூப்பிங் தி கலரில் 1ஆவது பட்டாலியன் ஐரிஷ் காவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விசாரணையில் உள்ள வீரர்கள் யாரும் திட்டமிடப்பட்ட குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி அணிவகுப்புகளில் பங்கேற்க மாட்டார்கள்.

எந்தவிதமான சட்டவிரோத அல்லது மோசடியான நடத்தையையும் இராணுவம் பொறுத்துக்கொள்ளாது. இது இப்போது ஒரு சுயாதீனமான அரச இராணுவ பொலிஸ் விசாரணைக்கு உட்பட்டுள்ளதால், மேலும் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1900ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியால் உருவாக்கப்பட்ட ஐரிஷ் காவலர்கள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மோதல்களின் ஒரு பகுதியாக நிறுத்தப்பட்டனர்.

ரெஜிமென்ட் – இளவரசர் வில்லியமை அதன் அரச கர்னலாகக் கருதுகிறது. மேலும், இந்த படை அரச அரண்மனைகளைக் காக்கிறது, அங்கு அவர்கள் தனித்துவமான சிவப்பு நிற டூனிக் மற்றும் கரடித் தோல் தொப்பியை அணிந்திருப்பதைக் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *