யாழ், மே 27
நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில், நீண்ட காலமாக யாழ் போதான வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமையை கவனத்தில் கொண்டு புதிய நியமனங்களை வழங்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதனை தெளிவுபடுத்திய அமைச்சர், எவ்வாறாயினும் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.



