
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயங்க ஆரம்பமாகின்றன.
மசகு எண்ணெய் இறக்குமதி தடைப்பட்டதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
தற்போது மசகு எண்ணெய் தொகை ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஆறு தினங்களுக்குள் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து முதல் தொகுதி எரிபொருளைச் சந்தைக்கு வழங்க முடியும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.