சிறுபோகம் நிறைவுபெறாவிடின் உணவுத்தட்டுப்பாடு உக்கிரமடையும்!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சிறுபோகச் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப்பிரிவு பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன தெரிவித்தார்.

சிறு போகத்திற்கு தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது நெற்செய்கையை செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுமாறு விவசாயிகளிடம் டி.அபேசிறிவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *