சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறை;ஒருவர் கைது!

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை பகிர்ந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதற்கமைய வன்முறைகள் இடம்பெற்ற இடங்களுக்கு நபர்களை அழைக்கும் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே ஒருங்கிணைக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் சில சமூக வலைத்தள குழுக்கள் பொலிஸாரினால் அடையாளங் காணப்பட்டன. 

இவற்றின் நிர்வாகிகள் (அட்மின்) கணனி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நேற்றுமுன்தினம் கம்பஹா – ஹரகம்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *