சஷி வீரவன்சவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முறையற்ற வகையில் வௌிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பான வழக்கில் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சஷி வீரவன்சவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.சஷி வீரவன்சவிற்கு சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 06 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *