
ஒரு வாரத்திற்குள் சுகாதார ஊழியர்களின் சம்பளக் குறைப்பை முழுமையாக நீக்குவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தீவிர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்
தற்போது நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியின் போது சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாகவும், சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.
சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியதையடுத்து, இது தொடர்பில் அவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஒரு வாரத்திற்குள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும், ஏற்கனவே சுகாதார சேவை ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், சம்பளப் பிடித்தம் நீக்கப்படாவிட்டால் அடுத்த வாரத்தின் பின்னர் தீவிர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு GMOA மத்திய குழு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.