எரிபொருளை , அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பிலியந்தலை, கவரபொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான குறித்த சந்தேக நபர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகன் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 180 லீற்றர் டீசல் மற்றும் 7 லீற்றர் பெற்றோலை ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஒரு போத்தல் டீசல் 600 ரூபாவுக்கும், ஒரு போத்தல் பெட்றோல் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.