50வது நாள் விழாவுக்கு தயாராகும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களம்!(படங்கள் இணைப்பு)

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் காலிமுகத்திடல் பகுதியில் பல்வேறு தரப்பினரும் இணைந்து முன்னெடுத்துவரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தின் 50 வது நாள் நாளையதினமாகும்.

இந்நிலையில் 50 நாளான நாளையதினம் கோட்டா கோ கம பகுதியில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் பிற்பகல் 2:00 மணிக்கு கொல்பிட்டிக்கு அருகில் கறுப்புக்கொடிகளை தாங்கியவாறு பேரணி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மக்கள் தங்கள் வீடுகள், வாகனம் ,வணிக நிறுவனங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு ஆர்ப்பாட்ட க்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *