
கொழும்பு,மே 27
கொழும்பில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை (27) அடையாள அணி வகுப்பிற்கு ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை தொடர்ந்து கொட்டாவ பிரதேசத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.