8 உயிர்களை பலி எடுத்த பாலம் – பிரதேச செயலரின் முக்கிய அறிவிப்பு

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் ஊடாக போக்குவரத்து செய்பவர்கள் மிக முக அவதானமாக பயணங்களை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

பாலத்தின் கீழ் உள்ள இரும்புகள் துருப்பிடித்துள்ளதால் தாழ் இறங்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் ஆகவே கவனமாக பயணங்களை மேற்கொள்ளுமாறு , கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த பாலத்தை பார்வையிடுவதற்காக இன்று அவர் சென்றிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வருட இறுதியில் பாலத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைகள் காரணமாக ,பாலத்தின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், இயந்திர படகு பயன்படுத்தப்பட்ட போது எட்டு உயிர்களை காவு கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *