
எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதனால் இராணுவத்தினரின் உதவியினைப் பெற ஆலோசிக்கப்படுவதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.எரிவாயு விநியோகிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை .
“ இன்று 27 சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட “எரிவாயு கொள்கலன்களை இராணுவத்தினரின் உதவியுடன் விநியோகிக்க நடவடிக்கை”என்ற தலைப்பிலான செய்தியிலே,“எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதனால் இராணுவத்தினரின் உதவியினைப் பெற ஆலோசிக்கப்படுவதாக”தெரிவிக்கப்படும் கூற்றில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதுடன், அது தவறான செய்தியாகும்.