லடாக் விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்

புதுடெல்லி,மே 27

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஷியோக் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் 7 ராணுவ வீரர்கள் பலியாகினர். 19 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி கூறியிருப்பதாவது,

லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது சென்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *