
கொழும்பு,மே 27
இலங்கைக்கான வெளிநாட்டு உதவி கூட்டினை அமைப்பதற்கான முன்யோசனை தொடர்பாக ஜப்பானும் இந்தியாவும் சாதகமான பதில் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.