மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 372 கிலோ மஞ்சள் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
வடமராட்சி கடற் பகுதியூடாக கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மஞ்சள் மூடைகள் தாளையடிடப்பகுதியில், வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
இச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதுடன் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.