எரிவாயு விற்பனை கறுப்புச் சந்தையில் தீவிரம்!

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இந்நிலையில் நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்துநிற்கின்றனர்.

இந்நிலையில் வவுனியாவில் சமையல் எரிவாயு கறுப்புச் சந்தைகளில் 10- 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டத்துக்குக் கிடைக்கும் சமையல் எரி வாயு சிலிண்டர்களைப் பதுக்கும் சில விற் பனை முகவர்கள் , அதனை வேறு இடங்களில் களஞ்சியப்படுத்தி , முச்சக்கரவண்டி சாரதிகளின் துணையுடன் 15 ஆயிரம் ரூபா வுக்கு விற்பனை செய்துவருகின்றனர் . 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரே 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பில் மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினர் அவதானம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *