
நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இந்நிலையில் நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்துநிற்கின்றனர்.
இந்நிலையில் வவுனியாவில் சமையல் எரிவாயு கறுப்புச் சந்தைகளில் 10- 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்துக்குக் கிடைக்கும் சமையல் எரி வாயு சிலிண்டர்களைப் பதுக்கும் சில விற் பனை முகவர்கள் , அதனை வேறு இடங்களில் களஞ்சியப்படுத்தி , முச்சக்கரவண்டி சாரதிகளின் துணையுடன் 15 ஆயிரம் ரூபா வுக்கு விற்பனை செய்துவருகின்றனர் . 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரே 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பில் மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினர் அவதானம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.