இலங்கைக்கான வெளிநாட்டு உதவி கூட்டினை அமைப்பதற்கான முன்யோசனை தொடர்பாக ஜப்பானும் இந்தியாவும் சாதகமான பதில் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் நெருக்கடியை நிவர்தி செய்ய உதவுவதற்கு இந்திய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
குவாட் உச்சிமாநாட்டின் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.