
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மர்மமான முறையில் மீட்கப்பட்டுள்ளன.
வட்டுக்கோட்டை மாவடி சங்கரத்தையிலுள்ள வீடொன்றிலிருந்தே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் ஒருவர் இரு வாரங்களுக்கு முன்பாகவும் மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னரும் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களின் உயிரிழப்பில் மர்மம் தொடர்வதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவிக்கு யாரும் இல்லை என விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 76 வயதுடையவர் என்றும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்த உதவிப் பணம் பெற்றுக் கொள்ளவராத நிலையில் கிராம அலுவலர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.