
கொழும்பு, மே 28
உடன் அமுலாகும் வகையில் இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தென் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், தென் மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ராஜித்த ஶ்ரீ தமிந்த கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.