
இலங்கையின் குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உட்பட மூன்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அஜித் ரோஹன தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும், தென் மாகாணத்தில் இருந்து எம்.டி.ஆர்.எஸ் தமிந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே சில்வா, குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் சேவைத்தேவையின் அடிப்படையில், பொதுச் சேவை ஆணைக்குழுவினால் இந்த இமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிற செய்திகள்
- 21ஆம் திருத்தச்சட்டத்திற்கு கட்சித்தலைவர்கள் ஆதரவு
- உதிரி பாகங்களின் விலை சடுதியாக உயர்வு; – மீண்டும் உயரும் பேருந்து கட்டணம்!
- ஜப்பான் – இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்!
- விமானங்களுக்கான எரிபொருள் கடும் பற்றாக்குறை; அமைச்சர் விசேட கவனம்
- விமானங்களுக்கான எரிபொருள் கடும் பற்றாக்குறை; அமைச்சர் விசேட கவனம்!
- அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் பச்சை கொடி
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்